பிரியாணி கடையில் தாக்குதல் நடத்திய யுவராஜ் உள்ளிட்ட 11 குண்டர்கள் மீது கொலை முயற்சி வழக்கு
பிரியாணி கடையில் தாக்குதல் நடத்திய யுவராஜ் உள்ளிட்ட 11 குண்டர்கள் மீது கொலை முயற்சி வழக்கை போலீஸார் பதிவு செய்தனர்.
Recommended Video
சென்னை: பிரியாணி கடையில் தாக்குதல் நடத்திய யுவராஜ் உள்ளிட்ட 11 குண்டர்கள் மீது கொலை முயற்சி வழக்கை போலீஸார் பதிவு செய்தனர்.
திமுக மாணவர் அணி நிர்வாகி யுவராஜ், திவாகர் ஆகியோர் கடந்த 28-ஆம் தேதி சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஒரு பிரியாணி கடைக்கு தங்களது குண்டர்களுடன் சென்றிருந்தனர்.
அப்போது கடை மூடியிருந்ததால் இவர்கள் கடையை திறக்குமாறு சொல்லியுள்ளனர். இதனால் ஊழியர்கள் கடையை திறந்தவுடன் பிரியாணி கேட்டனர். அதற்கு ஊழியர்கள் தீர்ந்துவிட்டது என்பதால்தான் கடையை மூடியுள்ளோம் என்று கூறியுள்ளனர்.
அதற்கு இந்த குண்டர்கள் நாங்கள் திமுகவை சேர்ந்தவர்கள், எங்களுக்கே பிரியாணி இல்லை என்கிறீர்களா என்று கேட்டு அங்கிருந்த கேஷியர் முகத்தில் சரமாரியாக குத்தினர். இதை தடுக்க முயன்ற கடை ஊழியர்களையும் தாக்கி இவர்கள் அட்ராசிட்டி செய்தனர்.
இதனால் மக்களும், திமுக தொண்டர்களும் அதிருப்தி அடைந்தனர். இந்த தாக்குதல் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதையடுத்து யுவராஜ், திவாகர் ஆகிய இருவரையும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்கி வைப்பதாக திமுக தலைமை கழகம் அறிவித்தது.
இதனிடையே யுவராஜ் உள்ளிட்ட 11 பேர் மீது கொலை முயற்சி வழக்கை போலீஸார் பதிவு செய்துள்ளனர்.