For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேச்சு.. சீமான் மீது போலீசார் வழக்குப் பதிவு

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

By Shyamsundar
Google Oneindia Tamil News

சென்னை: விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

முள்ளி வாய்க்கால் குறித்த நினைவேந்தல் கூட்டம் நாம் தமிழர் கட்சி கடந்த சார்பாக மே மாதம் 18-ம் தேதி நடத்தப்பட்டது. சென்னை கொட்டிவாக்கம் அருகே உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் இந்த நிகழ்ச்சி பெரிய அளவில் நடந்தது.

Police filed a case against Seeman for talking in favor of LTTE

1000க்கும் அதிகமானோர் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இலங்கையே போர் குறித்து பேசினார். அதோடு, விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக நிறைய கருத்துக்களை பேசினார் .

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார், அவர் மீண்டும் திரும்ப வருவார் என்று கூறியுள்ளார். அதேபோல் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக சில முக்கியமான விஷயங்களை பேசியுள்ளார்.

இதனால் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசியதற்காக அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியது உள்ளிட்ட 6 பிரிவுகளின் வழக்கு பதியப்பட்டுள்ளது. தரமணி போலீசார் சீமான் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதால் அவர் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

English summary
Police filed a case against Naam Tamilar Katchi the chief-coordinator, Seeman for talking in favor of LTTE.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X