For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எண்ணூர் துறைமுகம் அருகே சமையல் எரிவாயு கப்பல் மீது மோதிய கத்தார் கப்பல் மீது வழக்குப்பதிவு

எண்ணூர் துறைமுகம் அருகே சமையல் எரிவாயு கப்பல் மீது மோதிய கத்தாரின் டான் காஞ்சிபுரம் கப்பல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. துறைமுக பொதுமெலாளர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்

Google Oneindia Tamil News

சென்னை: எண்ணூர் துறைமுகம் அருகே கப்பல்கள் மோதி விபத்துக்குள்ளான வழக்கில் கத்தாரின் டான் காஞ்சிபுரம் கப்பல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 6 பிரிவுகளின் கீழ் மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கடந்த 28ஆம் தேதி எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் இருந்து புறப்பட்ட மாப்பிள் என்ற கப்பலும் மும்பையில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு வந்த காஞ்சிபுரம் டான் என்ற கப்பலும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதனால் 2 கப்பல்களும் பெரும் சேதமடைந்தன.

Police filed a complaint against down Kancheepuram ship for made the accident

இந்த விபத்தால் டான் காஞ்சிபுரம் கப்பலில் இருந்து கசிந்த கச்சா எண்ணெய் கடற்பரப்பில் பரவியது. எண்ணூர் முதல் திருவான்மியூர் வரை பரவிய எண்ணெய் படலத்தால் கடல் மாசுபாடு ஏற்பட்டுள்ளது.

ஏராளமான கடல்வாழ் உயிரினங்கள் செத்து கரை ஒதுங்கி வருகின்றன. இதனால் சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கடலில் பரவியுள்ள எண்ணெய்யை அகற்றும் பணி 8வது நாளாக இன்றும் நீடிக்கிறது.

இந்நிலையில் மேப்பிள் கப்பல் மீது மோதிய டான் காஞ்சிபுரம் கப்பல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எண்ணூர் துறைமுக மேலாளர் குப்தா அளித்த புகாரின் பேரில் மீஞ்சூர் போலீசார் கத்தார் கப்பல் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

விபத்தை ஏற்படுத்தியது, விபத்தை ஏற்படுத்தி கடல் மாசுபாட்டை ஏற்படுத்தியது உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி விசாரணை நடத்தி வருகின்றனர்.

English summary
Police filed a complaint against down Kancheepuram ship for made the accident in Ennore Port. The Minjur police have registered a case under 6 Sections.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X