For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கருணாஸ்க்கு இறுகுகிறது பிடி.. கஸ்டடியில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்கிறது போலீஸ்!

Google Oneindia Tamil News

Recommended Video

    கருணாஸ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்ட காட்சிகள்- வீடியோ

    சென்னை: கருணாஸை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி எழும்பூர் கோர்ட்டில் போலீசார் மனுதாக்கல் செய்துள்ளனர்

    முக்குலத்தோர் படைத் தலைவரும் எம்எல்ஏவுமான கருணாஸ் கடந்த 16ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பேசிய பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    முதல்வர் மற்றும் காவல்துறை அதிகாரிகளை மிரட்டும் வகையில் பேசினார் கருணாஸ். சாதி ரீதியாகவும் கலவரத்தை தூண்டும் வகையில் பேசியிருந்தார்.

    தனிப்படைகள்

    தனிப்படைகள்

    இதுதொடர்பாக அவர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கருணாஸை கைது செய்ய மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

    வேலூர் சிறையில் அடைப்பு

    வேலூர் சிறையில் அடைப்பு

    இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் அதிகாலை கருணாஸ் கைது செய்யப்பட்டார். புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவர் பின்னர் வேலூர் சிறைக்கு மாற்றப்பட்டார்.

    நாளை விசாரணை

    நாளை விசாரணை

    கருணாஸின் வழக்கறிஞர் நேற்று சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார். இந்த ஜாமீன் நாளை விசாரணைக்கு வரவுள்ளது.

    போலீசார் மனு

    போலீசார் மனு

    இந்நிலையில் எம்எல்ஏ கருணாஸை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி எழும்பூர் நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர். போலீசார் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    English summary
    Police have filed pettition in Chennai egmore court to take Karunas on Custody.MLA Karunas is in Vellore jail in the case of threaten to CM and Police.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X