வக்கீலை பார்க்க விடவில்லை.. வழக்கு விவரத்தை சொல்லவில்லை.. நக்கீரன் கோபாலுக்கு போலீஸ் கெடுபிடி
நக்கீரன் ஆசிரியர் ஆர். கோபாலை அவரது வக்கீலை பார்க்க விடாமல் போலீஸ் கெடுபிடியாக இருந்துள்ளது.
சென்னை: நக்கீரன் ஆசிரியர் ஆர். கோபாலை அவரது வக்கீலை பார்க்க விடாமல் போலீஸ் கெடுபிடியாக இருந்துள்ளது.
இது அனைவரின் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நக்கீரன் ஆசிரியர் ஆர். கோபால் இன்று காலை சென்னை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
பேராசிரியை நிர்மலா தேவி குறித்த கட்டுரை காரணமாக, ஆளுநர் மாளிகை கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது தேச துரோக வழக்கு பதியப்பட்டு இருக்கிறது.
[ ஜனநாயகத்தின் குரல் வளையை நெரிக்கும் செயல் இது.. கமல் கண்டனம் ]
வைகோ கைது செய்யப்பட்டார்
இந்த நிலையில் காலை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள போலீஸ் நிலையத்தில் நக்கீரன் கோபாலை சந்திக்க வைகோ முயற்சி செய்தார். ஆனால் அவர் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. அதோடு அவர் கைது செய்யப்பட்டு அந்த இடத்தில் இருந்தும் அப்புறப்படுத்தப்பட்டார்.
வழக்கறிஞர்
மேலும் நக்கீரன் கோபால் அவரது வழக்கறிஞரை சந்திக்க போலீஸ் அனுமதிக்கவில்லை. கடைசியாக கோர்ட்டில் ஆஜர்படுத்தும் முன் சில நிமிடங்கள் மட்டுமே இவர்கள் சந்தித்து இருக்கிறார்கள். அந்த சந்திப்பு முன்பு வரை நக்கீரன் கோபால் மீது என்ன மாதிரியான வழக்கு பதியப்பட்டு இருக்கிறது என்ற உண்மை நிலவரம் நக்கீரன் கோபாலின் வழக்கறிஞருக்கு தெரியாமல் இருந்துள்ளது.
ஸ்டாலின் சந்திப்பு
ஆனால் ஸ்டாலின் மட்டும் நக்கீரன் கோபாலை சந்திக்க அனுமதிக்கப்பட்டார். ஸ்டாலின் உடன் ஆ.ராசா மற்றும் துரைமுருகன் உடன் இருந்தனர். திருவல்லிக்கேணி அரசு மருத்துவமனையில் இந்த சந்திப்பு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
கூற மறுப்பு
இவர் மீது எந்த பிரிவின் கீழ் வழக்கு பதியப்பட்டு இருக்கிறது என்றும் போலீஸ் நேரடியாக தகவல் தெரிவிக்க மறுத்துவிட்டது. நக்கீரன் கோபால் மீது 124வது பிரிவின் கீழ் ஜாம்பஜார் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானாலும் போலீஸ் இது பற்றி முறையாக அறிவிக்காமல் அலைக்கழித்துள்ளது.