For Quick Alerts
For Daily Alerts
Just In
சென்னை மெரினாவில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு.. கெடுபிடியால் மக்கள் அவதி!
சென்னை மெரினாவில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்னை: மெரினாவில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. போலீஸ் கெடுபிடியால் கடற்கரைக்கு காற்று வாங்க வரும் மக்கள் பெரும் சிரமம் அடைந்துள்ளனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் காவிரி போராட்டத்துக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் மக்கள் கூடலாம் என போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரை உட்புறச் சாலையில் செல்ல வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. காவிரிக்காக போராடுவோருக்கு மெரினாவில் மீண்டும் கூடிவிடக்கூடாது என்பதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை என்பதால் சென்னைவாசிகள் பல ஆயிரம் பேர் காற்று வாங்க மெரினாவில் கூடுவார்கள். இந்நிலையில் இன்று மெரினாவில் போலீஸ் கெடுபிடி காட்டுவதால் பொதுமக்கள் சிரமம் அடைந்துள்ளனர்.
Comments
chennai marina police increased protest public சென்னை மெரினா போலீஸ் அதிகரிப்பு போராட்டம் பொதுமக்கள் பாதிப்பு
English summary
Police force have been increased in Chennai Marina. Police restricting Vehicles in Chennai marina interior road.
Story first published: Sunday, April 29, 2018, 15:45 [IST]