For Daily Alerts
Just In
கரூரில் பள்ளி மாணவி ஈவ் டீசிங்.. மற்றொரு வினுப்பிரியா பாணி சம்பவம் நடக்கவிடாமல் தடுத்த போலீஸ்
கரூர்: கரூர் பள்ளி மாணவியை ஈவ் டீசிங் செய்த வழக்கில் 3வது குற்றவாளியும் கைது செய்யப்பட்டுள்ளார். மூவருமே கல்லூரி மாணவர்களாகும்.
கரூர், வெங்கமேடு பகுதியை சேர்ந்த பிளஸ்-1 மாணவியை ஈவ் டீசிங் செய்ததாக கடந்த 28ம் தேதி போலீசில் புகார் தெரிவிக்கப்பட்டது. வினுப்பிரியாவை பேஸ்புக்கில் அசிங்கப்படுத்தியவருக்கு எதிராக போலீசார் நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக இருந்ததால் அவர் தற்கொலை செய்தார். எனவே விவகாரம் பெரிதாகியது. மாவட்ட எஸ்.பி கையெடுத்து கும்பிட்டு மன்னிப்பு கேட்டார். ஏட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
இந்த பரபரப்புக்கு நடுவே, ஈவ் டீசிங் வழக்கை எளிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது என உணர்ந்த போலீசார், தமிழரசன் மற்றும் சேதுபதி ஆகிய கல்லூரி மாணவர்களை கைது செய்தனர். இன்று, 3வதாக தினகரன் என்பவரை கைது செய்தனர். மூவரும் கல்லூரி மாணவர்களாகும்.
Comments
English summary
Police has been arrest 3 college student in the eve teasing case, in Karur.
Story first published: Thursday, June 30, 2016, 10:36 [IST]