தினகரன் ஆதரவாளர் வெற்றிவேலை பிடிக்க 7 தனிப்படைகள் அமைப்பு!
டிடிவி தினகரனின் ஆதரவாளர் வெற்றிவேலை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
Recommended Video
சென்னை: டிடிவி தினகரனின் ஆதரவாளர் வெற்றிவேலை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
டிடிவி தினகரனின் தீவிர ஆதரவாளர் வெற்றிவேல். இவர் தினகரனுக்கு ஆதரவாகவும் அரசுக்கு எதிராகவும் பல்வேறு அதிரடி குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறார்.
சென்னையில் நேற்று தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த இருவரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது முறைகேடு புகார் தெரிவித்துள்ளனர்.
முறைகேடு செய்ததாக புகார்
நெடுஞ்சாலை ஒப்பந்த பணிகளில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறவினர்களுக்கு தன்னிச்சையாக ஒதுக்கீடு செய்திருப்பதாக தங்க தமிழ்செல்வனும், வெற்றிவேலும் குற்றம் சாட்டியுள்ளனர்.
போலீஸ்க்கு மிரட்டல்
மேலும் தலைமை செயலகத்துக்குள் செல்ல முயன்ற தங்க தமிழ்செல்வன், வெற்றிவேலை போலீஸ் தடுத்த போது அவர்கள் போலீசாரை மிரட்டி அத்துமீறி நுழைந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கைது செய்ய முடிவு
அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும், இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குகள் தொடர்பாக தங்க தமிழ்செல்வன், வெற்றிவேலை கைது செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.
7 தனிப்படைகள் அமைப்பு
ஆனால் வெற்றிவேல் தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வெற்றிவேலை பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
போலீஸ் விசாரணை
அவரை தீவிரமாக தேடி வரும் தனிப்படை போலீசார்
வெற்றிவேலின் வீடு, அலுவலகங்களில் விசாரித்து வருகின்றனர். தங்க தமிழ்ச்செல்வன் மற்றும் வெற்றிவேல் ஆகியோர் தகுதிநீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.