மாநிலக் கல்லூரிக்கு பூட்டு - பச்சையப்பாஸ் மாணவர்களுக்கு ஆதரவாக போராட விடாமல் தடுப்பு
சென்னை: சென்னை மாநிலக்கல்லூரியில் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக போராடிய மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்ததால் தாக்கப்பட்ட பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்த மாநில கல்லூரியின் கதவுகளுக்கு பூட்டு போட்டு போலீஸார் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் மதுக்கடைகளுக்கு எதிரான போராட்டங்கள் வலுவடைந்து வருகின்ற நிலையில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி அவர்களின் போராட்டத்தினைக் கலைத்தனர்.
மதுக்கடைகளுக்கு எதிராக போராடிய பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மீது தாக்குதல் நிகழ்த்திய தமிழக அரசின் காவல்துறையினை கண்டித்து சென்னை மாநிலக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
இதையறிந்த காவல்துறையினர், மாநிலக்கல்லூரியின் கதவுகளை பூட்டி வைத்தனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.