தினகரன் போல என் மீதும் தேசத்துரோக வழக்கு பாயலாம் - மு.க.ஸ்டாலின்
டிடிவி தினகரன் போல என் மீதும் தேச துரோக வழக்கு போட வாய்ப்பு உள்ளது என்று திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
Recommended Video
சென்னை: டிடிவி தினகரன் போல என் மீதும் தேச துரோக வழக்கு போடலாம். அப்படி வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் என்று எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின். ரூ.40 கோடி லஞ்சம் வாங்கியதாக அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது புகார் உள்ளது என்றார்.
டிடிவி தினகரன் போல என் மீதும் தேச துரோக வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் என்று அவர் கூறியுள்ளார். மேலும் சுற்றுலா தல பட்டியலில் இருந்து தாஜ்மகால் நீக்கியது கண்டனத்திற்குரியது என்றும் தாஜ்மகால் விவகாரத்தில் மத்திய அரசு மதவாத அரசியல் செய்வது நிரூபணமாகியுள்ளது என்றும் குற்றம் சாட்டினார்.
முதல்வர் பழனிசாமி கடந்த 29ஆம் தேதி சேலத்தில் இருந்தபோது துண்டு பிரசுரம் வினியோகம் செய்ததாக கூறப்படுகிறது. அதில் குறிப்பாக நீட் தேர்வுக்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் செயல்பட்டு வருவதாக கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன. அந்த அடிப்படையில் தற்போது 17 பேர், மேலும் அடையாளம் தெரியாத 19 பேர் என மொத்தம் 36 பேர் மீது அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தினகரன் மீது முதல்வருக்கு எதிராகவும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் துண்டு பிரசுரம் வினியோகிக்க உத்தரவிட்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு இந்திய இறையான்மைக்கு எதிராக செயல்பட தூண்டியதாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது.
தினகரனின் செயல்பாட்டை தொடர்ந்து அடுத்த கட்டமாக எப்.ஐ.ஆரில் திருத்தம் செய்ய வாய்ப்பு உள்ளது. அவர் மீது தேச துரோக வழக்கு பாய வாய்ப்பு உள்ளது. இந்த வழக்கில் முன்ஜாமீன் பெறுவதை காட்டிலும் அவர் சிறைக்கு செல்வதற்கு தயாராக இருப்பதாக தெரிகிறது.
தற்போது எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலினும், டிடிவி தினகரன் போல என் மீதும் தேச துரோக வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் என்று கூறியுள்ளார்.