ரஜினியின் சமூக விரோதிகள் பேச்சுக்கு வலுக்கும் எதிர்ப்பு.. வீட்டைச் சுற்றிலும் போலீஸ் குவிப்பு
சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்தின் இல்லத்திற்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
Recommended Video
சென்னை: போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்தின் இல்லத்திற்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நேற்று தூத்துக்குடி சென்ற நடிகர் ரஜினிகாந்த் தூத்துக்குடி போராட்டத்தில் சமூக விரோதிகள் நுழைந்ததாலேயே வன்முறை வெடித்ததாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசும் போத தனது கருத்தில் இருந்து மாறுபாடாத ரஜினி செய்தியாளர்களிடம் ஆவேசமாக பேசியதோடு சமூக விரோதிகள் தான் காரணம் என திட்டவட்டமாக கூறினார்.
இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ரஜினியின் இந்த கருத்துக்கு பல்வேறு அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை போயஸ் கார்டன் வீட்டின் முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தேனாம்பேட்டை காவல் ஆணையர் தலைமையில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். ரஜினி வீட்டிற்கு அருகில் 200 மீட்டர் தொலைவுக்கு செல்ல வெளி நபர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
ரஜினியின் வீட்டை சுற்றிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் போயஸ் கார்டன் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.