For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சமூக விரோதிகள் ஊடுறுவலா… சென்னையில் போலீசார் விடிய விடிய சோதனை

சமூக விரோதிகள் சென்னையில் ஊடுறுவி உள்ளதாகக் கூறி போலீசார் சென்னையின் பல பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் பல்வேறு முக்கிய சாலைகளில் போலீஸ் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பல இடங்களில் விடிய விடிய சோதனைகள் நடைபெற்றன.

சமூக விரோத செயல்கள் சென்னையில் நடைபெற வாய்ப்பிருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, சென்னை போலீசார் உஷார் நிலைப்படுத்தப்பட்டனர். தீவிர கண்காணிப்பு சோதனையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

Police raids in Triplicane Manson

திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த விடுதிகளுக்கு இரவில் சென்ற போலீசார் அங்கு தங்கி இருப்பவர்களிடம் சோதனை நடத்தினார்கள். மேலும், சந்தேகத்திற்கு இடமானவர்களிடம் அடையாள அட்டை கேட்டு பரிசோதனை செய்தனர்.

தமிழகத்தில் அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிளவு காரணமாக அரசு நிர்வாகம் ஸ்தம்பித்திருக்கிறது. இந்நிலையில், சமூக விரோதக் கும்பல் ஊடுறுவல் இருப்பதாகக் கூறி மேலும், மக்கள் மத்தியில் பீதியில் ஏற்படுத்தாமல் பொறுப்பாக காவல்துறை நடந்து கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரியுள்ளனர்.

English summary
Chennai police conducted raids in Manson in Triplicane and Royapettai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X