For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கத்தி முனையில் சிறுமியை மிரட்டி பலாத்காரம் செய்தேன்: வீராசாமி வாக்குமூலம்

By Mayura Akilan
Google Oneindia Tamil News

கோவை: பொள்ளாச்சியில் பள்ளி மாணவிகளை பலாத்காரம் செய்த வீரசாமி இதுவரை பத்துக்கும் மேற்பட்ட சிறுமிகளை பலாத்காரம் செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. போதை மயக்கத்தில் இருக்கும் போது பிச்சையெடுக்கும் சிறுமிகளை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளதாக அவனே போலீசில் வாக்குமூலம் கொடுத்துள்ளான்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் விடுதியில் தங்கியிருந்த 2 மாணவிகள் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் வீரன் (என்கிற) வீராசாமியை போலீசார் கைது செய்தனர்.

அவனிடம் கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுதாகர் மேற்பார்வையில் பொள்ளாச்சி போலீஸ் துணை சூப்பிரண்டு முத்துராஜன் தலைமையில் 8 இன்ஸ்பெக்டர்கள் வாக்குமூலம் பெற்று வருகின்றனர்.

இந்த வாக்குமூலம் முழுமையாக வீடியோவில் பதிவு செய்யப்படுகிறது. எழுத்து மூலமாகவும் போலீசார் பதிவு செய்கிறார்கள்.

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் வீராசாமி கூறியதாக வெளியான தகவல்கள் வருமாறு:

கர்ப்பிணி மனைவி

கோவை மாவட்டம் வால்பாறையை சேர்ந்த வீரன் (எ) வீராசாமி ஆகிய நான் கடந்த சில வருடங்களுக்கு முன்பு பிழைப்பு தேடி பொள்ளாச்சி வந்தேன். இந்த நிலையில் பொள்ளாச்சியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். இப்போது என் மனைவி கர்ப்பிணியாக உள்ளார்.

போதை பழக்கம்

பொள்ளாச்சியில் எனக்கு நிரந்தர வேலை எதுவும் கிடைக்கவில்லை. எனவே கிடைத்த வேலையை செய்து வந்தேன். அப்போது பொள்ளாச்சி பஸ் நிலையத்தில் நள்ளிரவில் தங்கும் போதை கும்பலுடன் பழக்கம் ஏற்பட்டது.

கஞ்சா மது போதை

இதன் காரணமாக கஞ்சா புகைக்க கற்றுக் கொண்டேன். கஞ்சா புகைத்தவுடன் போதை தலைக்கேறிவிடும். கஞ்சாவுடன் மதுவையும் அருந்துவேன்.

பிச்சையெடுக்கும் சிறுமிகள்

பின்னர் பொள்ளாச்சி பஸ் நிலைய பகுதியில் தங்கியிருக்கும் பிச்சைக்கார சிறுமிகளை தூக்கி சென்று அவர்களுக்கு சாப்பிட திண்பண்டங்களும், புரோட்டாவும் வாங்கி கொடுப்பேன். அதன்பின்னர் சிறுமிகளை மயக்கி அவர்களை பலாத்காரம் செய்வேன். பின்னர் அங்கேயே போட்டுவிட்டு சென்றுவிடுவேன். பிச்சைக்கார சிறுமிகளை பலாத்காரம் செய்ததாக பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் நிலையத்தில் என் மீது 2 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

தாயுடன் இருந்த சிறுமி

இந்த நிலையில் கடந்த ஆண்டு பக்ரீத் பண்டிகையின் போது பொள்ளாச்சி பஸ் நிலையம் அருகிலுள்ள மசூதியில் பிச்சை எடுப்பதற்காக தாயுடன் வந்த சிறுமி மசூதி முன்பு படுத்திருந்தார்.

அந்த வழியாக வந்த நான் சிறுமியை பார்தததும் போதையில் அவரை கடத்தி சென்று பஸ் நிலையம் பகுதியில் மறைவான இடத்தில் வைத்து பலாத்காரம் செய்தேன். அந்த வழக்கும் கோவை கிழக்கு போலீஸ் நிலையத்தில் பதிவாகியுள்ளது.

பணம் வழிப்பறி

இந்த நிலையில் எனது தினசரி செலவுகளுக்காக தினமும் வெளியூரில் இருந்து பஸ் மூலம் பொள்ளாச்சிக்கு வரும் வெளியூர் பயணிகளை மட்டும் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பேன். சுமார் ரூ.500 வரை மட்டுமே பணத்தை பறிப்பேன். அப்போது தான் பணத்தை பறிகொடுத்தவர்கள் போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் கொடுக்க மாட்டார்கள் என எண்ணினேன்.

விடுதியில் இருந்த சிறுமி

அது போலவே இதுவரை நான்பணம் பறித்தவர்கள் யாரும் என் மீது புகார் கொடுக்கவில்லை. இந்த பணத்தை வைத்து தான் மது மற்றும் கஞ்சா அடிப்பேன். இந்த நிலையில் பஸ் நிலையம் அருகிலுள்ள விடுதியில் இருந்து சிறுமி பஸ் நிலையத்துக்கு வந்து அங்குள்ள கடையில் மிட்டாய் வாங்கி சாப்பிடுவார். அந்த சிறுமிக்கு திண்பண்டங்கள் வாங்கி கொடுத்து அவர் குறித்து விசாரித்தேன்.

கத்தியை காட்டி பலாத்காரம்

அப்போது அந்த சிறுமி விடுதியில் தங்கி படித்து வருவதை அறிந்தேன். தொடர்ந்து பல முறை திண்பண்டங்களும், புரோட்டாவும் வாங்கி கொடுத்து சிறுமியை பழக்கப்படுத்தினேன். இந்தநிலையில் சில நாட்களுக்கு முன்பு போதையில் விடுதிக்குள் புகுந்த நான் சிறுமியிடம் சாப்பிட புரோட்டா வாங்கித்தருவதாக கூறி அழைத்து வந்து கத்தியை காண்பித்து பலாத்காரம் செய்தேன். இவற்றை வெளியில் கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டினேன்.

மற்றொரு சிறுமி பலாத்காரம்

இந்த நிலையில் மீண்டும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முடிவு செய்தேன். விடுதிக்குள் சென்று மீண்டும் அந்த சிறுமியை கடத்த முயன்றேன். அப்போது போதையில்இருந்த நான் அங்கு படுத்திருந்த மற்றொரு சிறுமியின் மீதும் மோகம் ஏற்பட்டது.

மயங்கிய சிறுமி

அந்த சிறுமியை எழுப்பி உடன் வருமாறு அழைத்தேன். அதற்கு சிறுமி மறுத்ததால் தூக்கி சென்றேன். பின்னர் பலவந்தமாக கத்தியை காட்டி மிரட்டிசிறுமியை பலாத்காரம் செய்தேன் இதில் சிறுமி மயங்கினாள். அதிக ரத்த போக்கு ஏற்பட்டது. இதையடுத்து பயந்து போன நான் அங்கிருந்து தப்பி சென்றேன்.

கைது செய்த போலீசார்

பதுங்கிக்கொள்வதற்காக நண்பர்கள் உதவியுடன் மோட்டார் சைக்கிளில் உடுமலைக்கு சென்ற போது ரோந்து போலீசார் என்னை கைது செய்து பொள்ளாச்சி போலீசில் ஒப்படைத்தனர். இவ்வாறு வீராசாமி வாக்குமூலத்தில் கூறியுள்ளதாக தெரிகிறது.

வீராச்சாமிக்கு உதவி செய்ததாக அவருடைய நண்பர்கள் 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்களும் கைது செய்யப்பட்டனர்.

சிறுமிகளுக்கு சிகிச்சை

சிறுமிகள் பலாத்கார சம்பவத்தில் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிறுமிகள் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டதாக இன்று டாக்டர்கள் தெரிவித்தனர். கோவை மாவட்ட மனோதத்துவ நிபுணர் சிறுமிகளை பரிசோதனை செய்து அவர்கள் நல்ல நிலையில் இருப்பதாக அறிக்கை அளித்துள்ளார்.

English summary
In a quick breakthrough, a special team of the Coimbatore Police on Friday night arrested V. Veerasamy (24), who is the prime suspect in the Pollachi minor girls' rape case. Following a tip-off, investigators zeroed in on the suspect and apprehended him from his relatives' place in Udumalpet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X