அன்புமணி ராமதாஸ் மீது போலீசார் வழக்கு பதிவு!
தருமபுரி: இரு சமூகத்தினரிடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக பா.ம.க. வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தமிழகத்தில் ஏப்ரல் 24-ந் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தருமபுரி லோக்சபா தொகுதியில் பா.ம.க. சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் தருமபுரி தொகுதிக்குட்பட்ட மதிகோன்பாளையத்தில் பா.ம.க. சார்பில் மரக்காண கலவரத்தை நினைவு படுத்தியும், நத்தம் காலனி பிரச்னையை முன்வைத்தும் சில சி.டி.க்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன.
இதனால் இரு சமூகத்தினரிடையே மோதலை உருவாக்கும் விதமாகவும், அமைதியை சீர்குலைக்கும் விதமாகவும் பா.ம.க.வினர் செயல்படுவதாக தருமபுரி தாசில்தார் கொடுத்த புகாரின் பேரில் மதிகோன்பாளையம் போலீசார் அன்புமணி ராமதாஸ் மற்றும் பா.ம.க.வினர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.