இளம் பெண்ணை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த எதிர்வீட்டுக்காரர்.. உடந்தையாக இருந்த கணவன்! போலீஸ் வலை
நாகர்கோவில்: மதுவிற்கு ஆசைப்பட்டு மனைவியை எதிர்வீட்டுக்காரர் பலாத்காரம் செய்ய உடந்தையாக இருந்த நபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
Recommended Video
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த ராஜன் மனைவி கவிதா (23, பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன). தம்பதிகளுக்கு ஒரு கைக்குழந்தையும் உள்ளது.
மதுவிற்கு அடிமையான ராஜனுக்குருடைய கணவருக்கு வயது 28. இவர் சரியாக வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றியுள்ளார். இதனால் அந்த குடும்பம் வறுமையில் வாடியது.
எதிர்வீட்டுக்காரர் சதி
இதனால் கணவன், மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதை கவனித்த எதிர்வீட்டைச் சேர்ந்த நபர் ராஜனை அழைத்துச் சென்று அவ்வப்போது மதுபானம் வாங்கிக் கொடுத்துள்ளார். பின்னர் போதையிலிருந்த அவரிடம் மெதுவாக பேசி, "உனது மனைவியை எனக்கும் மனைவி போல இருக்கச் செய்தால் நீ கேட்கும் போதெல்லாம் மதுபானங்கள் வாங்கித் தருகிறேன்" என்று கூறியுள்ளார்.
பலாத்காரத்திற்கு உடந்தை
இதைக் கேட்ட ராஜனுக்கு கோபத்திற்கு பதில், மது மீது ஆசைதான் அதிகரித்துள்ளது. எனவே இந்த கொடூர திட்டத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். இதை தனது மனைவியிடம் சொல்லியுள்ளார். அதிர்ச்சியடைந்த அவர் கணவனை திட்டியுள்ளார். ஆனால் கவிதாவை அடித்து உதைத்த ராஜன், எதிர் வீட்டுக்காரரை வரவழைத்து அவரை பலவந்தம் செய்ய உதவியுள்ளார்.
வீடியோ
இப்படி உறவு வைத்துக்கொள்வதை, எதிர் வீட்டு நபர், கவிதாவுடன் இருந்ததை செல்போனில் வீடியோ படமும் எடுத்துள்ளார். அந்த வீடியோவை கவிதாவிடம் காண்பித்து மிரட்டி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாகவும், இதற்கும் ராஜன் உடந்தையாக இருந்ததாகவும் தெரியவந்துள்ளது. கொடுமைகள் தொடர்ந்ததால், கவிதா, தனது கைக்குழந்தையுடன் நாகர்கோவிலில் உள்ள தன்னுடைய சகோதரர் வீட்டுக்கு வந்து தனக்கு நேர்ந்த கொடுமைகளை கூறியுள்ளார்.
தகராறு
இதையடுத்து ராஜன், எதிர்வீட்டுக்காரர் மற்றும் அவருடைய மனைவி ஆகிய 3 பேரும் நேற்று முன்தினம் ஒரு காரில் நாகர்கோவில் வந்து கவிதாவை தங்களுடன் வரும்படி அழைத்ததாக தெரிகிறது. ஆனால் கவிதா அவர்களுடன் செல்ல மறுத்துவிட்டார். இதனால் அவர்களுக்கும், கவிதாவின் உறவினர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
போலீஸ் வழக்குப்பதிவு
தகவல் அறிந்ததும் நாகர்கோவில் கோட்டார் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். போலீசாரை பார்த்ததும் காரை விட்டுவிட்டு அவர்கள் 3 பேரும் தப்பிச் சென்றுவிட்டனர். காரை போலீசார் கைப்பற்றினர். பாலியல் பலாத்காரம் தொடர்பாக போலீசில் சம்பந்தமாக புகாரும் அளித்துள்ளார். அதன் பேரில் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.