டெய்லி நிர்வாண மசாஜ் புகார்: தூத்துக்குடி போலீஸ் வழக்கு பதிவு- கைதாகிறார் சசிகலா புஷ்பா?
தூத்துக்குடி: வீட்டில் பணிபுரிந்த பெண்களை நிர்வாண மசாஜ் செய்ய துன்புறுத்தியது உள்ளிட்ட புகார்களின் அடிப்படையில் அதிமுகவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட ராஜ்யசபா எம்.பி. சசிகலா புஷ்பா மீது தூத்துக்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதனால் சசிகலா புஷ்பா கைது செய்யப்படுவது உறுதி என கூறப்படுகிறது.
அதிமுகவில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட சசிகலா புஷ்பா எம்.பி. மீது அடுக்கடுக்கான புகார்கள் வரத் தொடங்கின. கொலை மிரட்டல், பண மோசடி ஆகிய புகார்கள் முதலில் கூறப்பட்டன.
பின்னர் அவரது வீட்டில் வேலை பார்த்த பானுமதி, ஜான்சி ஆகியோர் திடுக்கிடும் புகார்களை தூத்துக்குடி எஸ்.பி.யிடம் தெரிவித்திருந்தனர். அந்த புகாரில் தாங்கள் சசிகலா புஷ்பா வீட்டில் அனுபவித்த சித்ரவதைகளை விவரித்திருந்தனர்.
நிர்வாண மசாஜ்
மேலும் நாள்தோறும் இரவு நிர்வாண நிலையில் படுத்திருக்கும் சசிகலா புஷ்பாவுக்கு மசாஜ் செய்ய துன்புறுத்தப்பட்டதாக கூறியிருந்தனர். மேலும் சசிகலா புஷ்பா மகன் பாலியல் தொல்லை கொடுத்ததை அட்ஜஸ் செய்து கொள்ளுமாறு சசிகலா புஷ்பா மிரட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அமைச்சர் பழனியப்பனுடன்...
மேலும் பிலால் என்பவரை தாலி கட்டி சசிகலா புஷ்பா திருமணம் செய்து கொண்டார்; அமைச்சர் பழனியப்பனுடன் குடியும் கும்மாளமுமாக இருப்பார் என்றும் அந்த சகோதரிகள் புகார் தெரிவித்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
முன் ஜாமீன்
இந்த புகார்களை செய்தியாளர்களிடமும் பானுமதியும் ஜான்சிராணியும் விளக்கினர். இதனைத் தொடர்ந்து தாம் கைது செய்யப்படுவோமோ என்று பயந்த சசிகலா புஷ்பா, டெல்லி உயர்நீதிமன்றத்தில் நேற்று முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார்.
வழக்குப் பதிவு- கைது?
இந்நிலையில் தூத்துக்குடி போலீசார் இன்று சசிகலா புஷ்பா மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். பானுமதி, ஜான்சி ஆகியோர் கொடுத்த புகார்களின் அடிப்படையில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த வழக்கில் சசிகலா புஷ்பாவும் அவரது கணவர், மகன் உள்ளிட்டோர் கைது செய்யப்படுவது உறுதி என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.