For Quick Alerts
For Daily Alerts
Just In
Breaking News Live: தூத்துக்குடி துப்பாக்கி சூடுக்கு கண்டனம்.. சென்னையில் முதல்வர் வீடு முற்றுகை
தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் காவல் நிலையம் மீது அதிகாலை பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொலை செய்யப்பட்டதற்கு பொறுப்பேற்று, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி புரட்சிகர இளைஞர் கழகத்தினர், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் போராட்டம் நடந்தபோது போலீஸார் அங்கு துப்பாக்கிச் சூடு நடத்தியதால் அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது. இந்த நிலையில் இன்று அதிகாலை குளத்தூர் காவல் நிலையம் அருகே மர்ம நபர்கள் வந்துள்ளனர்.
அவர்கள் காவல் நிலையத்தின் மீது பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பி ஓடினர். அங்கிருந்த சிசிடிவி பதிவை வைத்து பெட்ரோல் குண்டு வீசியவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
Newest First Oldest First
READ MORE
Comments
English summary
Police searches for those who throw Petrol bomb on Kulathur Police station in Tuticorin.