For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னையில் நாளை 5000 போலீசார் பாதுகாப்பு.. பிரதமர் வருகையை முன்னிட்டு உச்சக்கட்ட 'செக்யூரிட்டி'

பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு சென்னையில் நாளை 5000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    ராணுவ கண்காட்சியை பார்வையிட நாளை சென்னை வருகிறார் மோடி

    சென்னை: பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு சென்னையில் நாளை 5000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.

    காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் பிரதமர் மோடி நாளை சென்னை வருகிறார்.

    Police security tightened in Chennai for Prime Minister Modi arrival

    நாளை சென்னை வரும் பிரதமர் மோடிக்கு கறுப்புக்கொடி காட்டப்படும் என எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன. இதனை முன்னிட்டு சென்னையில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பிரதமர் மோடி செல்லும் இடம் எங்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. மோடி வருகையை முன்னிட்டு சென்னையில் நாளை 5000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கமாண்டோ படை மற்றும் சிறப்பு அதிரடிப்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையம் முதல் அடையாறு புற்றுநோய் மையம் வரை பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    ஆலந்தூர் சைதாப்பேட்டை உள்ளிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை ஐஐடி மற்றும் புற்றுநோய் மையத்திற்கு 3 அடுக்கு பாதுகாப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    Police security tightened in Chennai for Prime Minister Modi arrival. 5000 Police will be in security work tomorrow in Chennai.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X