பதவி உயர்வு கிடைக்காததால் விரக்தியடைந்த எஸ்ஐ துப்பாக்கியால் சுட்டு தற்கொலை !
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில் பதவி உயர்வு கிடைக்காத போலீஸ் உதவி ஆய்வாளர் ஒருவர் தன்னைத் தானோ துப்பாக்கியால் சுட்டு கொண்டு தற்கொலை செய்து கொண்ட பரிதாபச் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் கரீம் நகர் மாவட்டத்தில் உள்ள படப்பள்ளி காவல் நிலையத்தில் போலீஸ் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார் ஜெகன்மோகன். இவர் தனக்கு ஆய்வாளராக பதவி உயர்வு கிடைக்கும் என எதிர்பார்த்து காத்திருந்தார். ஆனால் அதற்கு பதிலாக தெலுங்கான அரசு அவரை ஜம்மிகுண்டா மாவட்டத்திற்கு இடம் மாற்றம் செய்தாக கூறப்படுகிறது.
கரீம் நகர் மாவட்டத்தின் வித்யா நகரை சொந்த ஊராக கொண்ட ஜெகன்மோகன், அதனை விரும்பவில்லை. இதனால் மனம் உடைந்த அவர் நேற்று முன்தினம் காவலர் வீட்டு வசதி குடியிருப்பில் உள்ள தனது வீட்டில் இருந்தபோது காவல் துறை தனக்கு வழங்கியுள்ள கைத்துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் சக காவலர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.