வந்துடுச்சு இடைத்தேர்தல்... கல்லா பெட்டியை சட்டனெ திறந்து வைத்த மத்திய மா.செ.
Recommended Video
சென்னை: தமிழகத்தில் இடைத்தேர்தல் பரபரப்பு களைகட்டியுள்ளது. இரு தொகுதிகளிலும் யார் போட்டியிடப் போகிறார்கள் என்பது ஓரிருநாட்களில் அறிவிக்கப்பட உள்ளது.
ஆனால் யார் வேட்பாளர்? அவரது வெற்றிக்கு எப்படி உழைப்பது? என்ன மாதிரியான வியூகம் வகுப்பது? ஜெயிக்க வைக்க வேண்டியது நம்ம பொறுப்பாச்சே என்கிற கவலை ஏதும் இல்லாமல் வேறு ஒரு கணக்குப் போட்டு வருகிறாராம் அந்த கட்சியின் மத்திய மா.செ.
பொதுவாக இடைத்தேர்தல் என்றால் எந்த கட்சியாக இருந்தாலும் பிற மாவட்டங்களில் இருந்து நிர்வாகிகள் படையெடுத்து அத்தொகுதியில் முகாமிட்டு ஏரியா ஒன்றை பிரித்துக் கொண்டு கட்சி வேலை பார்ப்பர். இதுதான் தமிழக அரசியல் களம் இதுவரை கண்ட அனுபவம்.
தற்போது மத்திய மா.செ.வோ, பிற மாவட்டங்களின் மா.செ.க்களுக்கு போனடித்து ஒரு தகவலை சொல்கிறார்.. அதாவது, நீங்க ஒரு 200 பேரை கொண்டு வந்து இங்க வேலை செய்யுறதுக்கு என்ன செலவாகுமோ அதை அப்படியே என்கிட்ட கொடுத்திடுங்க.. நாங்க எலக்ஷன் வேலை பார்த்துக் கொள்கிறோம் என கூறியிருக்கிறார்.
கனிமொழியின் வெற்றிக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுவதாக தமிழிசை அறிவிப்பு
இதை கேட்டு நொந்து போன மா.செ. ஒருவர், காலையிலேயே போனடிச்சு கதறவிடுறாங்கப்பா.. இப்படி ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு டார்கெட்டுனா மொத்த கணக்கு என்னாச்சு? மிச்சம் மீது கட்சி தலைமைக்கும் போகாது.. நமக்கு திரும்பவும் வராது.. அப்ப அவங்க கல்லாபெட்டிக்குத்தானே.. காலக் கொடுமை அண்ணே புலம்பியிருக்கிறார்.