பஸ்ல 2.. ஏர்போர்ட்ல 4.. கூவத்தூர்ல 6.. சசி எம்.எல்.ஏக்களை விளாசும் மக்கள் #MLAsForSale
சென்னை: அதிமுக சசிகலா குரூப், எம்.எல்.ஏக்களுக்கு கோடிக்கணக்கில் விலை பேசிய அசிங்கம் தேசிய அளவில் இன்று அக்கட்சியின் பெயரை நாறடித்தது. மக்கள் டிவிட்டரிலும், சமூக வலைதளங்களிலும் அவர்களை சரமாரியாக விமர்சித்து வருகின்றனர்.
அதிமுக சசிகலா அணியில் இடம் பெற்று கூவத்தூர் முகாமில் அடைபட்டு பின்னர் அங்கிருந்து தப்பி ஓபிஎஸ் பக்கம் வந்தவர் மதுரை தெற்கு சரவணன். இப்போது மீண்டும் எடப்பாடி குரூப்பில் போய் சேர்ந்துள்ளார்.
இந்த நிலையில் சசிகலா குரூப் எம்.எல்.ஏக்களுக்கு கோடிக்கணக்கில் விலை பேசியதை இவர் தனது வாயால் விளக்கியுள்ளார். இதை டைம்ஸ் நவ் - மூன் டிவி நடத்திய ஸ்டிங் ஆபரேஷன் அம்பலப்படுத்தியுள்ளது.
சமூக வலைதளங்களில் விமர்சனம்
இதையடுத்து சமூக வலைதளங்களில் அதிமுகவை மக்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பல்வேறு கட்சியினரும் பொதுமக்களும் விமர்சித்து வருகின்றனர்.
|
டிஆர்பி ராஜா
முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவின் மகனும் எம்எல்ஏவமான டிஆர்பி ராஜாவின் டிவீட் இது.
|
மோடி நேர்மையான மனிதராக இருந்தால்
பிரதமர் மோடி உண்மையிலேயே ஊழலுக்கு எதிரானவராக இருந்தால் உடனடியாக தமிழக அரசை டிஸ்மிஸ் செய்து விட்டு தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும்.
|
அவமானம் - குஷ்பு
தமிழகத்திற்கு அதிமுக அவமானத்தைத் தேடிக் கொடுத்து விட்டது என்று காட்டமாக கூறியுள்ளார் குஷ்பு.