ஓ.பி.எஸ். போட்டியிடும் போடியில் வாக்குச்சாவடியை முற்றுகையிட்ட அரசியல் கட்சியினர்
தேனி: அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் போட்டியிடும் போடியில் வாக்குச்சாவடிக்குள் அதிமுகவினரை மட்டும் வைத்து வாக்குப்பதிவு எந்திரங்கள் திறக்கப்பட்டுள்ளது. இதை கண்டித்து அரசியல் கட்சிகள் வாக்குச்சாவடியை முற்றுகையிட்டனர்.
தேனி மாவட்டத்தில் உள்ள போடிநாயக்கனூர் தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார். சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு துவங்கியது.
இந்நிலையில் போடியில் உள்ள 74வது வாக்குப்பதிவு மையத்தில் வாக்குப்பதிவு எந்திரங்களை அதிமுகவினர் முன்பு திறந்ததாக கூறப்படுகிறது. முறைப்படி வாக்குச்சாவடி முகவர் முன்பு தான் எந்திரங்களை திறக்க வேண்டும்.
அப்படி இருக்கையில் பத்திரிக்கையாளர்களையும் அனுமதிக்காமல் அதிமுகவினர் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் திறக்கப்பட்டதை கண்டித்து அரசியல் கட்சியினர் வாக்குச்சாவடியை முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.