For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புதுவையின், நெல்லித்தோப்பு தொகுதிக்கும் நவ.19ல் தேர்தல்.. களமிறங்குகிறார் முதல்வர் நாராயணசாமி

By Veera Kumar
Google Oneindia Tamil News

புதுச்சேரி: தமிழகத்தின் தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளைப்போலவே புதுவையின் நெல்லித்தோப்பு தொகுதிக்கும் நவ. 19ல் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

புதுவையில் காங்கிரஸ், திமுக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த மாநிலத்தின், நெல்லித்தோப்பு தொகுதி எம்.எல்.ஏ. ஜான்குமார் ராஜினாமா செய்ததால், தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லித்தோப்பு தொகுதியில் புதுவை முதல்வர் நாராயணசாமி போட்டியிட ஏதுவகா ஜான்குமார் ராஜினாமா செய்திருந்தார். எனவே நாராயணசாமி அத்தொகுதியில் காங்கிரஸ் சார்பில் களமிறங்க உள்ளார்.

Polling in Nellithoppu of Puducherry on November 19

நெல்லித்தோப்பு தொகுதிக்கும், தமிழக தொகுதிகளை போலவே, அக்டோபர் 26-ல் வேட்புமனுத் தாக்கல் தொடங்குகிறது. நவம்பர் 2ம் தேதி வேட்புமனு வேட்புமனு தாக்கல் முடிவடையும். நவம்பர் 5ம் தேதி வேட்புமனு வாபஸ் வாங்க கடைசி நாள் ஆகும்.

நவம்பர் 22-ல் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

English summary
Polling in Nellithoppu, Tirupparankundram, Thanjavur and Aravakurichi constituencies on November 19.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X