கர்நாடகத்தில் பாஜக வெல்ல தமிழகத்தில் சிறப்பு யாகம்... செய்தது யார் பாருங்க!
கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெற வேண்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் யாகம் வளர்த்து சிறப்பு பூஜை நடத்தினார்.
Recommended Video
ராமேஸ்வரம்: கர்நாடக சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெற வேண்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் யாகம் வளர்த்து சிறப்பு பூஜை நடத்தினார்.
கர்நாடாகவில் நடைபெறவிருக்கும் தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற வேண்டி மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயிலில் காலை 5 மணி முதல் கலச பூஜை நடத்தி பின் சிறப்பு யாகம் வளர்த்தார்.
இதைத்தொடர்ந்து சாமி தரிசனம் செய்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது டிடிவி தினகரன் நல்ல ஜோதிடராக மாறி வருகிறார் என அவர் சாடினார்.
மேலும் கர்நாடகாவில் பாஜக ஆட்சியமைக்கும், காவிரி மேலாண்மை வாரியம் அமையும் என்று அவர் கூறினார்.
தனுஷ்கோடி முதல் தலைமன்னார் வரை கப்பல் போக்குவரத்திற்கும், கன்னியாகுமரி முதல் ராமேஸ்வரம் வரை படகு போக்குவரத்திற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழகத்தின் அனைத்து பிரச்னைக்கும் பாஜகவை குறைகூறுவது வேடிக்கையாக உள்ளது என்று கூறிய பொன் ராதாகிருஷ்ணன் காவிரி வாரியம் கண்டிப்பாக அமையும் என்றார்.