‘எல்லாப் புகழும் இறைவனுக்கே’... ஒரே நாளில் ஆடி விரதம், இப்தார் விருந்தில் பங்கேற்ற பொன்னார்!
சென்னை: நேற்று ஆடி விரதம் மேற்கொண்டிருந்த மத்திய அமைச்சர் மொன்.ராதாகிருஷ்ணன் இப்தார் விருந்திலும் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
நேற்று, சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் பாஜக கூட்டணி கட்சிகள் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை அனைத்து இந்திய முஸ்லீம் முன்னேற்ற கழகம் ஏற்பாடு செய்து இருந்தது. இந்த நிகழ்ச்சியில், அக்கட்சியின் தலைவரான சதக்கத்துல்லா தலைமை தாங்கினார்.
பொதுவாக ஆடி அமாவாசை தினத்தில் ஆண்டுதோறும் விரதம் இருந்து கன்னியாகுமரி கடலில் பொன்.ராதாகிருஷ்ணன் திதி கொடுப்பது வழக்கம். அந்தவகையில் நேற்று விரதம் மேற்கொண்ட பொன்.ராதாகிருஷ்ணன் போலீஸ் பாதுகாப்பை தவிர்த்து தனியாக மேற்கு மாம்பலத்தில் உள்ள சிவன் கோவிலுக்கு சென்று அங்குள்ள குளக்கரையில் திதி கொடுத்தார்.
அதனைத் தொடர்ந்து மாலையில் பாஜக கூட்டணி கட்சிகளின் இப்தார் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். விரதம் கடைபிடித்ததால் நோன்பு கஞ்சியை மட்டும் தவிர்த்து விட்டார்.
அதனைத் தொடர்ந்து ஒரே நாளில் இரு விரதங்களில் பங்கேற்றது குறித்து அவர் பேசியதாவது:-