போராட வேண்டியது தமிழகத்திலா? இல்லை டெல்லியிலா? பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி
சென்னை: போராட வேண்டியது தமிழகத்திலா? இல்லை டெல்லியிலா? என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தனது டிவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரியும், காவிரியில் தண்ணீர் திறக்கக் கோரியும், விவசாயிகளின் கடன்களை ரத்து செய்ய வலியுறுத்தியும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும் தமிழக விவசாயிகள் அய்யாக்கண்ணு தலைமையில் கடந்த 13-ம் தேதி முதல் டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முதலில் அமைதியாக அறவழி போராட்டம் நடத்தினார்கள். அறவழிப் போராட்டத்தின் அடுத்த கட்டமாக "சங்கு ஊதி போராட்டம்", "சடலம் போல் படுத்துப் போராட்டம்", "ஒப்பாரி வைக்கும் போராட்டம்" எல்லாம் நடத்திப் பார்த்து, இறுதியில் "மரத்தில் ஏறி தற்கொலை செய்து கொள்ளும்" போராட்டத்தில் இறங்கி தங்கள் உயிரையே மாய்த்துக் கொள்ள விவசாயிகள் முயன்றது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தப் போராட்டத்துக்கு தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகினர் மற்றும் சமூகநல அமைப்பினர் நேரில் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மத்திய, மாநில அரசுகளின் கவனத்தை ஈர்ப்பதற்கு பல்வேறு அமைதி வழிப் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் விவசாயிகளின் போராட்டம் 15வது நாளை எட்டியுள்ளது.
இந்நிலையில் டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவது குறித்து மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பல்வேறு கேள்விகளை தனது டிவிட்டர் மூலம் எழுப்பியுள்ளார். அதில்காரிஃப் பயிர் நிலைமை குறித்து நவம்பர் மாதம் தமிழக அரசு அறிக்கை மத்திய அரசிற்கு தந்திருக்க வேண்டும். தமிழகத்தில் 400க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். மத்திய அரசை மட்டும் குறை சொல்லி போராட்டம் நடத்தும் நோக்கம் என்ன?
போராட வேண்டியது தமிழகத்திலா? இல்லை டெல்லியிலா? இங்கு போராடுவோர் இனியேனும் உண்மையை உணர்ந்து கொள்வார்கள் என நம்புகிறேன். விவரமான அறிக்கையை மத்திய அரசிற்கு அனுப்பப்பட்டுள்ளதா? என்பதை போராட்டக்காரர்கள் கேள்வி கேட்டதுண்டா? எனக் பல்வேறு கேள்வி எழுப்பியுள்ளார்.
போராட வேண்டியது தமிழகத்திலா? இல்லை டெல்லியிலா? இங்கு போராடுவோர் இனியேனும் உண்மையை உணர்ந்து கொள்வார்கள் என நம்புகிறேன்(2)
— Pon Radhakrishnan (@PonnaarrBJP) March 27, 2017
விவரமான அறிக்கையை மத்திய அரசிற்கு அனுப்பப்பட்டுள்ளதா? என்பதை போராட்டக்காரர்கள் கேள்வி கேட்டதுண்டா? அப்படியெனில் இவர்கள் (1)
— Pon Radhakrishnan (@PonnaarrBJP) March 27, 2017
விவசாயிகள் தற்கொலை 400 க்கும் மேல் தமிழகத்தில் நடந்துள்ளது எனில் எத்தனை வழக்குகள் அதுகுறித்து பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான (1)
— Pon Radhakrishnan (@PonnaarrBJP) March 27, 2017
குறை சொல்லி போராட்டம் நடத்தும் நோக்கம் என்ன?(2)
— Pon Radhakrishnan (@PonnaarrBJP) March 27, 2017
தெரியுமா ? என வேளாண்துறை செயலாளர் கேள்வி கேட்க சரியான பதிலளிக்க முடியாமல் இருந்தவர்கள். சிலர் தூண்டிவிட மத்திய அரசை மட்டும் (1)
— Pon Radhakrishnan (@PonnaarrBJP) March 27, 2017