For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பொதுத் துறை ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு

Google Oneindia Tamil News

Jayalalitha
சென்னை: தமிழக பொதுத்துறை ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிக்கப் பட்டுள்ளது.

இது குறித்து தமிழக நிதித்துறை செயலாளர் கே.சண்முகம் வெளி யிட்ட அறிவிப்பில் கூறி யிருப்பதாவது:-

மின்சார வாரியம், குடிநீர் வடிகால் வாரியம், போக்குவரத்து கழகம் உள்பட மாநிலத்தின் அனைத்து பொதுத்துறை நிறு வனங்களிலும் பணியாற் றும் ஏ மற்றும் பி பிரிவு பணி யாளர்கள் அனைவருக்கும் ஆயிரம் ரூபாய் பொங்கல் போனசாக அளிக்கப்படும். இதே போன்று சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு ரூ. 3 ஆயிரம் என்ற உச்ச வரம்புக்கு உட்பட்டு 30 நாட் கள் ஊதியத்துக்கு இணையான மிகை ஊதியம் வழங்கப்படும். இதன்படி அவர்களுக்கு ரூ. 3 ஆயிரம் போனஸ் கிடைக்கும்.

போக்குவரத்து கழகங்கள் உள்பட அனைத்து பொதுத் துறை நிறுவனங்களிலும் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் அல்லது குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ரூ. 500 பொங்கல் பரிசாக அளிக்கப்படும்' என இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 5ம் தேதி தமிழக முதல்வர் ஜெயலலிதா அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனசை அறிவித்தார். தற்போது அதே அளவு போனஸ் பொதுத் துறை ஊழியர்கள் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
The Tamil nadu governments finance secretary Sanmugam has announced Pongal bonus for the public sector employees.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X