சபரிமலை, தைப்பூசம்... பாண்டியன், பொதிகை மேல்மருவத்தூரில் நின்று செல்லும்.. தெற்கு ரயில்வே!
மதுரை: சபரிமலை சீசன் மற்றும் தைப்பூசம் ஆகிய விசேஷங்களையொட்டி மேல்மருத்துவர் நிலையத்தில் ரயில்கள் நின்று செல்லும் என்று தெற்கு ரயில்வேயின் மதுரைக் கோட்டம் அறிவித்துள்ளது.
அதன்படி கீழ்க்கண்ட ரயில்கள் டிசம்பர் 10ம் தேதி முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 3ம் தேதி வரை இந்த ரயில்கள் மேல்மருத்தூர் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூர் - திருச்சி மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ், சென்னை எழும்பூர் -மதுரை வைகை எக்ஸ்பிரஸ், சென்னை எழும்பூர் - மதுரை பாண்டியன் எக்ஸ்பிரஸ், சென்னை எழும்பூர் - செங்கோட்டை பொதிகை எக்ஸ்பிரஸ், ஹஸரத் நிஜாமுதீன் - மதுரை சம்பர்க் கிராந்தி எக்ஸ்பிரஸ், லோக்மான்யா திலக் டெர்மினஸ் - மதுரை எக்ஸ்பிரஸ், சென்னை எழும்பூர் -நாகர்கோவில் எக்ஸ்பிரஸ், ஹஸரத் நிஜாமுதீன் - கன்னியாகுமரி திருக்குறள் எக்ஸ்பிரஸ், சென்னை எழும்பூர் - மன்னார்குடி எக்ஸ்பிரஸ், சென்னை எழும்பூர் - மதுரை வாரம் இருமுறை எக்ஸ்பிரஸ், புவனேஸ்வர் - ராமேஸ்வரம் வாராந்திர எக்ஸ்பிரஸ், வாரணாசி - ராமேஸ்ரம் வாராந்திர எக்ஸ்பிரஸ்.
இதேபோல மறுமார்க்கத்திலிருந்து புறப்பட்டு வரும் இந்த ரயில்களும் மேல்மருவத்தூரில் நின்று செல்லும்.