For Daily Alerts
Just In
8 மணி நேர வேலை, பணி நிரந்தரம்... நாடு முழுவதும் கிராமிய அஞ்சல் ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்
நாடு முழுவதும் கிராமிய அஞ்சல் ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் இன்று முதல் ஈடுபடவுள்ளனர்.
சென்னை: 8 மணி நேர வேலை, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அஞ்சல் ஊழியர்கள் நாடு முழுவதும் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் இன்று முதல் ஈடுபடவுள்ளனர்.
ஏழாவது ஊதியக் குழுவில் அஞ்சல் ஊழியர்களின் பிரச்னைகள் பற்றிய அறிக்கையை அளிக்க அமைக்கப்பட்ட கமலேஷ் சந்திரா கமிட்டி அரசுக்கு வழங்கிய பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி கிராமிய அஞ்சல் ஊழியர்களும் அஞ்சல் இலாகா ஊழியர்தான் என்ற தீர்ப்பாணையை உடனடியாக அமல்படுத்த வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் கிராமிய அஞ்சல் ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை தொடங்கவுள்ளனர்.
8 மணி நேர வேலை, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளையும் வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெறுகிறது.
Comments
English summary
All India Rural Mail Employees Association today stages indefinite strike demanding to implement Kamalesh Chandra committees recommendations.
Story first published: Wednesday, August 16, 2017, 8:19 [IST]