விடுதலையானார் ஜெயலலிதா - பலித்த “தங்கத் தாரகை” போஸ்டர் !
சென்னை : சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா விடுதலையாவார் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள அதிமுகவினர் தீர்ப்பிற்கு முன்பே ஜெயலலிதா விடுதலை என்ற போஸ்டர்களையும் சென்னையில் ஒட்டி வந்த நிலையில் அப்போஸ்டர் வாசகங்கள் பலிக்கும் வகையில் விடுதலையாகியுள்ளார் ஜெயலலிதா.
ஜெயலலிதா மீதான சொத்துகுவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு இன்று காலை 11 மணிக்கு வெளியிடப்பட்டதை அடுத்து அதிக அளவிலான அதிமுக தொண்டர்கள் போயஸ் கார்டனில் குவிந்துள்ளனர்.
ஏற்கனவே தீர்ப்பு குறித்தி அதிமுக தொண்டர்கள், "நல்ல தீர்ப்பு வரும் என எதிர்பார்க்கிறோம். அம்மா விடுதலை ஆவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. அவர்கள் மக்களுக்காக எத்தனையோ நன்மைகள் செய்துள்ளார்.
இவைகள் அனைத்தும் பொய்யான வழக்குகள். இவைகள் அம்மாவை ஒன்றும் செய்து விடாது" என தெரிவித்திருந்த நிலையில் ஜெயலலிதா மற்றும் குற்றம் சாட்டப்பட்ட மற்ற 4 பேரும் வழக்கிலிருந்து முழுமையாக விடுவிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.