For Daily Alerts
Just In
வர்தா புயல்: வடசென்னை, வல்லூர் அனல்மின் நிலையங்களில் மின் உற்பத்தி நிறுத்தம்
சென்னையை சிதைத்த வர்தா புயல் கரையை கடந்துவிட்டது. இப்புயலால் வடசென்னை, வல்லூர் அனல்மின் நிலையங்களில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
சென்னை: சென்னையை தாக்கிய வர்தா புயலால் வடசென்னை மற்றும் வல்லூர் அனல்மின் நிலையங்களில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது.
சென்னையை பலமான வர்தா புயல் 3 கட்டமாக தாக்கி கரையை கடந்தது. வர்தா புயல் மரக்காணம் முதல் ஸ்ரீஹரிகோட்டா வரை மையம் கொண்டிர்ருந்தது.
சென்னையில் ஒட்டுமொத்தமாக இயல்பு வாழ்க்கை நாசமாகிவிட்டது. பேய்க்காற்றும் கனமழையும் கொட்டியது.
இதனிடையே வர்தா புயல் கரையைக் கட்டந்த வடசென்னை மற்றும் வல்லூர் பகுதிகளில் அனல்மின் நிலையங்களில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. கல்பாக்கம் அணு உலையும் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
English summary
Due to the Cycloe Vardah today power generation stopped at the North Madras and Vallur plants.