For Daily Alerts
Just In
கொருக்குப்பேட்டை மின்நிலையத்தில் தீ... வட சென்னையில் மின் விநியோகம் பாதிப்பு
சென்னை: கொருக்குப்பேட்டையில் உள்ள துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக வட சென்னையில் மின்விநியோகம் பாதிக்கப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை மாலையில் இங்குள்ள ஒரு டிரான்ஸ்பார்மர் வெடித்து தீவிபத்து ஏர்பட்டது. இதையடுத்து கிட்டத்தட்ட 6 மணி நேரத்திற்கு மின் விநியோகம் பாதிக்கப்பட்டது. இதனால் மாலை ஆறரை மணிக்கு மேல் மின்சாரம் இல்லாமல் வட சென்னை கடுமையாக பாதிக்கப்பட்டது.
தீ விபத்து ஏற்பட்டதும் தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். கொருக்குப்பேட்டை, வண்ணாரப்பேட்டை, அம்பத்தூரிலிருந்து தீயணைப்பு வண்டிகள் வந்தன. இரவு எட்டரை மணியளவில் தீ அணைக்கப்பட்டது.
டிரான்ஸ்பார்மர் வெடித்தது ஏதோ குண்டு வெடித்தது போல சப்தமாக இருந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
Comments
English summary
A fire broke out at a Tamil Nadu Electricity Board substation in Korrukupet after a transformer burst on Sunday evening. Power supply remained disrupted for more than six hours in north Chennai after the fire broke out at 6.30pm.