For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புழல் சிறையில் வேல்முருகனுடன் பி.ஆர் பாண்டியன் சந்திப்பு

புழல் சிறையில் இருக்கும் வேல்முருகனை விவசாய சங்கத் தலைவர் பி.ஆர் பாண்டியன் சந்தித்தார்.

By Mohan Prabhaharan
Google Oneindia Tamil News

சென்னை : தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் தவாக தலைவர் வேல்முருகனை அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர் பாண்டியன் நேரில் சந்தித்தார்.

தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்ததற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அங்கு தமிழக அரசைக் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார்.

 PR Pandiyan meets Velmurugan in Puzhal Jail

இதனையடுத்து உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவந்த நிலையில், நெய்வேலி என் எல் சி வளாகத்தில் நடந்த போராட்டத்தின் போது, இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதற்காக தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவரை அனைத்து விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் பி.ஆர் பாண்டியன் இன்று நேரில் சந்தித்தார். அப்போது அவரிடம் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார்.

வேல்முருகன் கைதைக் கண்டித்து நாளை சென்னையில் மதிமுக சார்பில் அறவழி ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இதில் அனைத்து கட்சித் தொண்டர்களும் திரளாக கலந்துகொள்ள வேண்டும் என்று வைகோ அழைப்பு விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
PR Pandiyan meets Velmurugan in Puzhal Jail. Earlier Tamizhaga Vazhurimai Katchi Leader Velmurugan arrested under National Defence Act.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X