பிரபாகரன் பிறந்த நாள்.. தூத்துக்குடியில் ரத்ததான முகாம்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் பிறந்தநாள் விழா தூத்துக்குடியில் கொண்டாடப்பட்டது. இதையொட்டி இனிப்பு வழங்கும், ரத்ததானம் செய்தும் நாம் தமிழர் கட்சியினர் அதைக் கொண்டாடினர்.
தூத்துக்குடி மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் 59வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பிறந்தநாளை முன்னிட்டு தூத்துக்குடி பழைய பஸ் நிலையத்தில் பயணிகளுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
தொடர்ந்து மாவட்ட மாணவர் பாசறை சார்பில் ரத்ததானம் வழங்கும் முகாம் நடத்தப்பட்டது. முகாமிற்கு மாவட்ட செயலாளர் தா.மி.பிரபு என்ற அலைமகன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் இசக்கிதுரை, இணை செயலாளர் சுப்புராஜ், ஒருங்கிணைப்பாளர் வெற்றிசீலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ரத்ததான முகாமில் ஏராளமான நிர்வாகிகள் பங்கேற்று ரத்ததானம் செய்தனர்.
இதில், தெற்கு மாவட்ட செயலாளர் இசக்கிராஜா, மாவட்ட இளைஞரணி செயலாளர் வேல்ராஜ், இளைஞரணி செயலாளர் ஜெயக்குமார், மாணவர் பாசறை செயலாளர் ரமேசுபாபு மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.