For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புன்னைநல்லூர் கோயிலில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழிபாடு!!

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்துக்கு வருகை தந்த ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி தஞ்சாவூர் அருகே புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் இன்று சாமி தரிசனம் செய்தார்.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாப சுவாமி கோயிலில் இன்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி சுவாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் தனி விமானம் மூலம் முற்பகல் திருச்சிக்கு வருகை தந்தார்.

Pranab visiting Tiruchi today

அவரை தமிழக ஆளுநர் கே. ரோசய்யா, மாநில அமைச்சர்கள் வரவேற்றனர். இதைத் தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் தஞ்சாவூர் சென்ற ஜனாதிபதி அங்கிருந்து புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்தினார்.

பின்னர் திருச்சி என்.ஐ.டி பொன்விழா கொண்டாட்டத்தில் பங்கேற்கிறார். விழாவுக்கு பிறகு ஹெலிகாப்டர் மூலம் திருச்சி விமான நிலையம் வரும் பிரணாப் முகர்ஜி, மாலை 5.45 மணிக்குத் தனி விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.

ஜனாதிபதியின் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

English summary
Comprehensive security measures will be in place for President Pranab Mukherjee's visit to Tiruchi and Thanjavur on Saturday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X