குறைப் பிரசவத்தில் பிறந்த சிசு.. இதயத்தில் துளையுடன் உயிர் போராட்டம்.. கை கொடுத்து உதவுங்கள்
கோவை: குறை பிரசவத்தில் பிறந்து தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் குழந்தையை காப்பாற்ற நிதியுதவி செய்யுமாறு பெற்றோர் மன்றாடுகிறார்கள்.
ராமுவுக்கும், மலர்கொடிக்கும் திருமணமாகி சில ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் இருந்தது. சிகிச்சைக்கு பிறகு மலர்கொடி கர்ப்பமானார். ஆனால் ஆண் குழந்தை குறை பிரசவத்தில் 24 வாரத்தில் பிறந்தது.
பல குறைகளுடன் பிறந்த குழந்தையை தீவிர சிகிச்சை பிரிவில் வைத்துள்ளனர். 760 கிராம் எடையுடன் பிறந்த குழந்தையின் இதயத்தில் ஓட்டை உள்ளது.
இது குறித்து ராமு கூறியதாவது,
எங்கள் குழந்தை உயிருக்கு போராடும் என்று நினைக்கவே இல்லை. பிறந்து சில நிமிடங்களிலேயே குழந்தையை வென்டிலேட்டரில் வைத்துவிட்டனர். அவனுக்கு பல குறைகள் உள்ளது.
நாங்கள் விவசாய பின்னணி கொண்டவர்கள். தண்ணீர் பஞ்சத்தால் கூலி வேலைக்கு சென்று கொண்டிருக்கிறோம். என் மனைவி கர்ப்பமாகத் தேவையான சிகிச்சைக்காக சேமித்த பணத்தை செலவு செய்தோம். மேலும் நிலத்தையும் அடமானம் வைத்துள்ளோம். தற்போது குழந்தையை காப்பாற்ற எங்களிடம் பணம் இல்லாமல் போராடுகிறோம் என்றார்.
இதயத்தில் உள்ள ஓட்டைக்காக குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தை தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் இருக்க வேண்டியுள்ளது. இன்னும் இரண்டு மாதங்கள் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். ஆனால் சிகிச்சைக்கான பணத்தை கட்ட முடியாமல் பெற்றோர் திணறுகிறார்கள். சிகிச்சைக்கு சுமார் ரூ. 4 லட்சம் தேவைப்படுகிறது.
குழந்தையை காப்பாற்ற ராமு மற்றும் மலர்கொடி உங்களின் உதவியை நாடுகிறார்கள். செய்தியில் உள்ள லிங்க்கை கிளிக் செய்தோ, இல்லை வங்கி கணக்கிற்கு டிரான்ஸ்பர் செய்தோ நிதியுதவி அளிக்கலாம்.
வங்கி கணக்கு எண்: 2223330012657590
வங்கி கணக்கு வைத்திருப்பவரின் பெயர்: மலர்கொடி
ஐஎப்எஸ்சி கோடு: YESB0CMSNOC
இந்த கணக்கில் NEFT/IMPS டிரான்ஸ்பர் மட்டுமே செய்ய முடியும், நேரடி பண டெபாசிட்டை தவிர்க்கவும்.
பணம் டிரான்ஸ்பர் செய்பவர்கள் அதற்கான ரெபரன்ஸ் எண், உங்களின் பெயர், செல்போன் எண்ணுடன் [email protected] என்ற முகவரிக்கு இமெயில் அனுப்பினால் நீங்கள் நிதியுதவி செய்ததை அங்கீகரித்து ரசீது வழங்கப்படும்.
RECOMMENDED STORIES