For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கருணாநிதி மறைவு.. வல்லமைமிக்க மரபினை விட்டுச் சென்றிருக்கிறார்.. ஜனாதிபதி தமிழில் இரங்கல்

தமிழக முதல்வர் இருக்கையை ஐந்து முறை அலங்கரித்த கருணாநிதியின் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக முதல்வர் இருக்கையை ஐந்து முறை அலங்கரித்த கருணாநிதியின் மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வராக 5 முறை பதவி வகித்தவர், 13 முறை தோல்வியே காணாமல் சட்டசபை உறுப்பினராக இருந்தவர் மு கருணாநிதி.

President of India Ramnath Govind condoles for Karunanidhis demise

கடந்த 10 நாட்களுக்கும் மேலாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று மாலை 6.10 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது.

அவரது மறைவுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் தனது இரங்கலை டிவிட்டர் வாயிலாக தமிழில் பதிவிட்டுள்ளார்.


திரு.கருணாநிதி அவர்களின் மறைவு அறிந்து வேதனை அடைந்தேன். கலைஞர் என்று அன்போடு அழைக்கப்பட்டவர் நம் வாழ்வில் வல்லமைமிக்க மரபினை விட்டுச் சென்றிருக்கிறார். எனது ஆழ்ந்த இரங்களை அவரது குடும்பத்தாருக்கும், மற்றும் கோடிக்கணக்கான மக்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு குடியரசுத் தலைவர் தனது இரங்கலை பதிவு செய்துள்ளார்.

English summary
President of India Ramnath Govind condoles for Karunanidhi's demise.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X