போலீஸ் பிடியில் இருந்து தப்பியோடிய கைதி: புதுக்கோட்டையில் பரபரப்பு
புதுக்கோட்டை: பாலியல் பலாத்கார வழக்கில் கைதான ஒருவர் போலீஸ் பிடியில் இருந்து தப்பியோடிய சம்பவம் புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள ஒத்தகடையைச் சேர்ந்தவர் சரத்குமார். இவர் அதேபகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படும் வழக்கில் கைது செய்யப்பட்டார்.
மேலும் சரத்குமார் மீது பெண் கடத்தல் வழக்கும் பதிவாகியுள்ளது. இந்நிலையில் புதுக்கோட்டை மகளிர் நீதிமன்றத்தில் போலீசார் அவரை நேற்று ஆஜர்படுத்தினர்.
விசாரணைக்கு பின்னர் சிறைக்கு கொண்டு செல்வதற்கு முன்பு உடல் பரிசோதனை நடத்த மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது சரத்குமார் போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓடிவிட்டார். அவரை தேடும்பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். கைதி தப்பியோடிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.