For Daily Alerts
Just In
மதுரை மத்திய சிறையில் விசாரணைக் கைதிகளிடையே திடீர் மோதல்- ஒருவர் பலி
மதுரை: மதுரை மத்திய சிறையில் விசாரணைக் கைதிகளிடையே ஏற்பட்ட திடீர் மோதலில், கைதி ஒருவர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மத்திய சிறையில் தண்டனை பெற்ற கைதிகளுடன், விசாரணைக் கைதிகளும் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணை கைதிகளுக்கிடையே திடீர் மோதல் ஏற்பட்டது.
இந்த மோதலில் விசாரணை கைதி செந்தில் என்பவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தகவல் கிடைத்தவுடன் கரிமேடு போலீஸார் விரைந்து வந்தனர்.
சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸார், கீழக்குடியைச் சேர்ந்த செந்தில்குமார் என்ற கைதியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments
English summary
A brutal fight between two groups of inmates killed an inmate at central prison in Madurai today.
Story first published: Wednesday, February 24, 2016, 13:15 [IST]