பணத்தை ஏமாற்றிய நிதிநிறுவனம்.. மூன்று சகோதரிகள் தற்கொலை முயற்சி.. ஒருவர் பலி
சேலத்தில் தனியார் நிதிநிறுவனம் பணத்தை ஏமாற்றியதால் வேதனையடைந்த மூன்று சகோதரிகள் தற்கொலைக்கு முயன்றனர்.
Recommended Video
சேலம்: தனியார் நிதிநிறுவனம் பணத்தை ஏமாற்றியதால் வேதனையடைந்த மூன்று சகோதரிகள் தற்கொலைக்கு முயன்றனர். அவர்களில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சேலத்தை சேர்ந்த மூன்று சகோதரிகள் அங்குள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் பணம் முதலீடு செய்திருந்தனர். இந்நிலையில் அந்த தனியார் நிதி நிறுவனம் பணத்தை தராமல் ஏமாற்றியதாக தெரிகிறது.
சகோதரிகள் மூன்று பேரும் திருமணத்திற்காக பணத்தை சேமித்த வைத்திருந்த நிலையில் நிதி நிறுவனம் ஏமாற்றியதால் பணம் மீண்டும் கிடைக்காது என்ற சூழல் ஏற்பட்டுள்ளது.
[40 கைது.. 7 நாள் கலவரம்.. உ.பி மாநில பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கிய சிறுவர்களின் கிரிக்கெட் சண்டை!]
இதனால் அதிர்ச்சியடைந்த சகோதரிகள் மூன்று பேரும் விஷம் குடித்து தற்கொலை முயன்றனர். இதையடுத்து மூன்று பேரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களில் மேனகா என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆபத்தான நிலையில் உள்ள ரேவதி மற்றும் கலை ஆகிய 2 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.