ராணிப்பேட்டை அருகே ஊதுபத்தி ஆலையில் தீ விபத்து.. பல லட்சம் மூலப்பொருட்கள் கருகின
தனியார் ஊதுபத்தி ஆலையில் தீ விபத்து ஏற்பட்டுது.
Recommended Video
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அருகே தனியார் ஊதுபத்தி தயாரிப்பு ஆலை குடோனில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை அருகே உள்ள பகுதி வன்னிமேடு. இங்கு இண்டர்நேசனல் அகர்பத்தி என்ற தனியார் தொழிற்சாலை குடோன் ஒன்று இயங்கிவருகிறது.
இந்நிலையில் இன்று காலை இந்த குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து குறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. ராணிப்பேட்டை, ஆற்காடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 3 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்த வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் 3 மணி நேரத்துக்கும் மேலாக ஈடுபட்டு வருகின்றனர்.
தீ மளமளவென பற்றி எரிந்து வருவதால் அந்த பகுதியே புகை மூட்டத்துடன் காணப்படுகிறது. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மூலப்பொருட்கள் கருகியும், மற்றும் இயந்திரங்கள் சேதமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீ விபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை