For Daily Alerts
Just In
இனி ஹோட்டலில் டீ, காபி குடிப்பீங்க? தனியார் பால் நிறுவனங்களின் விலை உயர்வு நள்ளிரவு முதல் அமல்!
தமிழகத்தில் தனியார் பால் நிறுவனங்கள் அறிவித்த விலை உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.
சென்னை: தமிழகத்தில் தனியார் நிறுவனங்களின் பால் விலை லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.5 வரை நள்ளிரவு முதல் உயர்ந்துள்ளது.
ஆந்திராவின் பால் நிறுவனங்களான திருமலா, டோட்லா, ஜெர்சி, ஹெரிடேஜ் ஆகியவை ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் பால் விலையை லிட்டருக்கு ரூ2 முதல் ரூ5 வரை உயர்த்தியுள்ளன.
இதர திருமலா, ஹெரிட்டேஜ் ஆகியவை இன்று திங்கள்கிழமை நள்ளிரவு முதல் விலையை உயர்த்துகின்றன. பால் மட்டுமின்றி தயிர் விலையும் 1 லிட்டருக்கு ரூ5 அதிகரித்துள்ளது.
அதாவது 1 லிட்டர் தயிர் விலை இனி ரூ55 ஆக இருக்கும். இந்த பால்விலை உயர்வால் டீ, காபி ஆகியவற்றின் விலை கணிசமாக உயரும் நிலை உள்ளது.
Comments
English summary
Private dairy units have hiked the milk price by Rs 2 to Rs 5 per litre in TamilNadu.
Story first published: Monday, March 6, 2017, 7:50 [IST]