For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஈரோட்டில் 11-ம் வகுப்பு மாணவி தற்கொலை.. பள்ளி விடுதி அறையில் தூக்கில் தொங்கினார்

தனியார் பள்ளி விடுதியில் 11-ம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

By A S Ramesh
Google Oneindia Tamil News

Recommended Video

    பள்ளி விடுதி அறையில் மாணவி தற்கொலை-வீடியோ

    ஈரோடு: ஈரோட்டில் தனியார் பள்ளி விடுதியில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஈரோடு புதுக்காலனியை சேர்ந்தவர் பழனிச்சாமி. சுமைதூக்கும் தொழிலாளியான இவரது மகள் ஜெயபிருந்தா. ஈரோடு அருகேயுள்ள கொங்கம்பாளையத்தில் செயல்படும் தனியார் பள்ளியான எஸ்.எஸ்.வி.என்னில் 11 ம் வகுப்பு விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார்.

    private school hostel student suicide in erode

    இந்நிலையில் நேற்று வகுப்பிற்கு சென்று விட்டு வந்த அவர் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக விடுதி காப்பாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில் சம்பவ பகுதிக்கு வந்த சித்தோடு போலீசார் மாணவியின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

    மேலும் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் மாணவி தற்கொலை செய்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி விடுதி அறையில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    Private school hostel student suicide in Erode
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X