For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முழு அடைப்புக்கு ஆதரவு- நாளை தமிழகத்தில் தனியார் பள்ளிகள் மூடல்!

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: விவசாய மற்றும் வணிகர் சங்கங்களின் நாளை முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து தமிழகம் முழுவதும் நாளை தனியார் பள்ளிகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாளைக்கு பதிலாக சனிக்கிழமையன்று பள்ளிகள் இயங்கும் என்றும் தனியார் பள்ளி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

கர்நாடகாவில் தமிழர்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து தமிழகம் தழுவிய முழு அடைப்புப் போராட்டம் நாளை நடைபெறுகிறது. இந்த முழு அடைப்புப் போராட்டத்துக்கு பெரும்பாலான அரசியல் கட்சிகள், இயக்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.

Private Schools support to TN Bandh

அதேபோல் தனியார் பேருந்து உரிமையாளர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த போராட்டத்துக்கு தனியார் பள்ளி உரிமையாளர் சங்கமும் ஆதரவளிப்பதாக அதன் தலைவர் நந்தகுமார் அறிவித்துள்ளார்.

இதனால் நாளை 18,000 தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக் பள்ளிகள் இயங்காது. அனைத்துக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு பதிலாக நாளை மறுநாள் சனிக்கிழமையன்று தனியார் பள்ளிகள் இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

English summary
TN Private School Owners Association leader NandhaKumar said that they also support to the Bandh on Friday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X