கைவினைஞர்களின் உற்பத்தி மேம்படுத்தப்படும்.. கலைவாணர் அரங்கங்கத்தில் முதல்வர் பழனிச்சாமி பேச்சு
தமிழகத்தில் கைவினைஞர்களின் உற்பத்தி மேம்படுத்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து இருக்கிறார்.
Recommended Video
சென்னை: தமிழகத்தில் கைவினைஞர்களின் உற்பத்தி மேம்படுத்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்து இருக்கிறார்.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் கைவினைஞர்கள் தின விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கைவினைஞர்கள் குறித்து பேசினார்.
அதில் ''கைவினைப்பொருள்களின் உற்பத்தி மேம்படுத்தப்படும். அதேபோல் தமிழகத்தில் இருக்கும் கைவினைஞர்களின் திறன் பயிற்சிகளின் மூலம் மேம்படுத்தப்படும்'' என்று குறிப்பிட்டார்.
மேலும் ''சிங்கப்பூர், மலேசியா, ஆஸி.க்கு தமிழகத்தில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும். பூம்புகாரில் இருக்கும் உற்பத்தி மையங்களில் இருந்து இந்த ஏற்றுமதி நடைபெறும்'' என்றார்.
மேலும் ''தமிழகத்தில் வருடா வருடம் 247 கைவினைஞர்களில் 7 பேருக்கு சிறந்த விருது வழங்கபடுகிறது. இதில் எப்போதும் தமிழகம் முதல் இடம் வகித்து வருகிறது'' என்று குறிப்பிட்டு இருக்கிறார்.