For Daily Alerts
Just In
ஓஎன்ஜிசிக்கு எதிராக போராட்டம் நடத்திய பேரா. ஜெயராமன் மீண்டும் கைது
ஓஎன்ஜிசிக்கு எதிராக போராட்டம் நடத்தியதால் பேராசிரியர் ஜெயராமன் மீண்டும் கைது செய்யப்பட்டார்.
நன்னிலம்: திருவாரூரில் ஓஎன்ஜிசிக்கு எதிராக போராட்டம் நடத்திய பேராசிரியர் ஜெயராமன் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் ஓஎன்ஜிசியின் நடவடிக்கைகளை கடுமையாக எதிர்த்து வருபவர் பேராசிரியர் ஜெயராமன். அண்மையில் கதிராமங்கலம் மக்கள் கிளர்ச்சியின் போது பேராசிரியர் ஜெயராமன் கைது செய்யப்பட்டார்.
அதன்பின்னர் பேராசிரியர் ஜெயராமன் எழுதிய நூல் ஒன்றுக்காக அவர் மீது தேசதுரோக வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் திருவாரூரில் ஓஎன்ஜிசிக்கு எதிராக போராட்டம் நடத்தியதால் பேராசிரியர் ஜெயராமன் இன்று மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
பேராசிரியர் ஜெயராமன், அவரது மனைவி சித்ரா உட்பட 4 பேரை நன்னிலம் போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.
Comments
English summary
Prof. Jayaraman and Four Persons including his wife Chitra arrested for Protest against ONGC in Thiruvarur on Monday.
Story first published: Monday, December 11, 2017, 10:54 [IST]