ஸ்டெர்லைட்: தமிழகத்தில் தீவிரமாகும் போராட்டம் சென்னையில் கவுதமன் கைது.. இடிந்தகரையில் டாஸ்மாக் சூறை
ஸ்டெர்லைட்டுக்கு எதிராக துப்பாக்கிச் சூடு நடத்திய போராட்டக்காரர்கள் மீது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது.
Recommended Video
சென்னை: ஸ்டெர்லைட்டுக்கு எதிராக துப்பாக்கிச் சூடு நடத்திய போராட்டக்காரர்கள் மீது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராட்டம் இன்று 100-ஆவது நாளை எட்டியது. 100 நாட்களாகியும் தங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என மக்கள் வேதனையில் இருந்தனர்.
இந்நிலையில் இன்று தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணி சென்ற போராட்டக்காரர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். அப்போது பொதுமக்களும் பதிலுக்கு கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
ஆவேசத்தை கட்டுப்படுத்த
இதில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கற்களை கொண்டு துரத்தியதால் போலீஸார் ஓட்டம் பிடித்தனர். இதையடுத்து மற்றொரு பகுதியில் குவிக்கப்பட்ட ஏராளமான போலீஸார் பொதுமக்களின் ஆவேசத்தை கட்டுப்படுத்த கண்ணீர் புகை குண்டு வீசினர்.
தடியடி
தூத்துக்குடி நகரமே போர்க்களமான நிலையில் வஜ்ரா வாகனம், ஏராளமான போலீஸாரை தாண்டி பொதுமக்கள் முன்னோக்கி சென்று கலெக்டர் அலுவலகத்தை அடைந்தனர். அப்போதும் பொதுமக்கள் மீது தடியடி நடத்தப்பட்டது.
கண்டனம்
இதையடுத்து பொதுமக்கள் அலுவலகத்துக்குள் நுழைய முற்பட்டதால் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 8 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
போராட்டம்
இந்நிலையில் போலீஸார் துப்பாக்கிச் சூட்டை கண்டித்து இடிந்தகரையில் போராட்டம் நடத்தினர். அப்போது அங்குள்ள டாஸ்மாக் கடை சூறையாடப்பட்டது. மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலும் போராட்டம் நடைபெற்றது. சென்னையில் மறியல் போராட்டம் நடத்திய இயக்குநர் கவுதமன் கைது செய்யப்பட்டார்.