For Daily Alerts
Just In
அனிதா மரணத்துக்கு நீதி கோரி கோவை காந்திபுரம் மேம்பாலத்தில் போராட்டம்
கோவை: நீட் காவு கொண்ட அனிதாவின் மரணத்துக்கு நீதி கோரி கோவை காந்திபுரம் மேம்பாலத்தில் பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.
நீட் தேர்வு முறையால் அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார். தமிழக மக்களை இந்த மரணம் கொந்தளிக்க வைத்துள்ளது.
சென்னை முதல் கன்னியாகுமரி வரை அனைத்து நகரங்களிலும் போராட்டங்கள் வெடித்துள்ளன. மக்கள் தங்களது கோபங்களையும் குமுறல்களையும் வீதிகளில் வந்து அனிதாவின் பதாகைகளுடன் வெளிப்படுத்துகின்றனர்.
கோவை காந்திபுரத்தில் மேம்பாலத்தில் ஏறி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். ஒரு கட்டத்தில் பொதுமகக்ள் அப்படியே மேம்பாலத்தில் உட்கார்ந்தும் விட்டனர். இதையடுத்து போலீசார் போராட்டம் நடத்துவோருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
Comments
English summary
People protest in Coimbatore over Anitha suicide due to NEET.