For Daily Alerts
Just In
ரேஷன் கடைகளில் சர்க்கரை விலை மிகக் கடுமையாக உயர்வு- கொந்தளிப்பில் பொதுமக்கள்!
ரேஷன் கடைகளில் சர்க்கரை விலை உயர்த்தப்பட்டிருப்பதற்கு தமிழகம் முழுவதும் பயனாளிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சென்னை: ரேஷன் கடைகளில் சர்க்கரை விலை உயர்த்தப்பட்டிருப்பதற்கு தமிழகம் முழுவதும் பயனாளிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் ரேஷன் கடை உணவுப் பொருட்களை லட்சக்கணக்கான மக்கள் நம்பியுள்ளனர். கடைகளில் சர்க்கரை கிலோ 40 ரூபாய்க்கு மேல் விற்பதால் அனைத்து தரப்பு மக்களும் ரேஷன் கடைகளில் கொடுக்கப்படும் சர்க்கரையை வாங்கி பயனடைந்து வருகின்றனர்.
இந்நிலையில் நவம்பர் 1ஆம் தேதி முதல் நியாய விலைக்கடைகளில் விற்பனை செய்யப்படும் சர்க்கரை விலை கிலோவுக்கு ரூ.11.50 உயர்த்தப்பட்டு ரூ.25க்கு விற்பனை செய்யப்படும் என்று தமிழக அரசு நேற்றிரவு அறிவித்துள்ளது.
இதற்கு தமிழகம் முழுவதும் பயனாளிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சர்க்கரை விலை உயர்வை தமிழக அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Comments
English summary
Tamil Nadu govt has raised the sugar price in Ration shops. People condemns for this and urging govt to withdraw the price raise.