நெடுவாசல் போராட்ட குழுவுடன் புதுக்கோட்டை ஆட்சியர் பேச்சுவார்த்தை
நெடுவாசல் போராட்ட குழுவினருடன் புதுக்கோட்டை ஆட்சியர் கணேஷ் பேச்சுவார்த்தை இன்று பேச்சுவார்த்தை நடத்தினார்.
புதுக்கோட்டை: ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து போராடும் நெடுவாசல் போராட்டக் குழுவினருடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கணேஷ் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் 18 நாட்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இதேபோல் கோட்டைக்காடு கிராமத்திலும் போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டங்களை முடிவுக்குக் கொண்டு மாவட்ட நிர்வாகம் தீவிர முயற்சிகளில் இறங்கியது. கோட்டைக்காடு கிராம மக்களுடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த அனுமதிக்க மாட்டோம் என மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார்.
இதனால் கோட்டைக்காடு கிராம போராட்டம் முடிவுக்கு வந்தது. ஆனால் நெடுவாசலில் போராட்டம் நீடித்தது. இதனிடையே வடக்கன்காடு கிராமத்திலும் போராட்டம் ஞாயிற்றுக்கிழமையன்று போராட்டம் தொடங்கியது.
இந்த நிலையில் நெடுவாசல் போராட்ட குழுவுடன் புதுக்கோட்டை ஆட்சியர் ஞாயின்று பேச்சுவார்த்தை நடத்தினார். இப்பேச்சுவார்த்தையில் போராட்டக் குழுவினர் பங்கேற்றுள்ளனர்.